1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Due to technical issue sterlite oxygen production stopped

ஸ்டெர்லைட்டில் நிறுத்தப்பட்ட ஆக்சிஜன் தயாரிக்கும் பணி: காரணம் என்ன?

ஆக்சிஜன்
ஸ்டெர்லைட் ஆலையில் திடீரென ஆக்ஸிஜன் தயாரிக்கும் பணி நிறுத்தப்பட்ட்ட் இருப்பதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
தமிழக அரசால் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை சமீபத்தில் ஆக்சிஜன் தயாரிக்கும் பணிக்காக திறப்பதற்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்தது. இதனை அடுத்து அந்த ஆலை திறக்கப்பட்டு முதல் தவணையாக 4.82 மெட்ரிக் டன் ஆக்சிஜன் நேற்று கண்டெய்னரில் நெல்லை மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த ஆக்சிஜன் நெல்லை மற்றும் சுற்றுப்புறத்தில் உள்ள மருத்துவமனைக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டது இந்த நிலையில் தொடர்ச்சியாக ஸ்டெர்லைட்டில் இருந்து ஆக்சிஜன் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென ஆக்சிஜன் தயாரிக்கும் பணியில் உள்ள ஆலையில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு உள்ளதாகவும் இதனை அடுத்து ஆக்சிஜன் தயாரிக்கும் பணி நிறுத்தப்பட்டுள்ளது எனவும் தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
இருப்பினும் இன்னும் ஒரு சில மணி நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டு ஆக்சிசன் தயாரிக்கும் பணி தொடங்கும் என்று கூறப்படுகிறது
 
 
About Writer
siva
அடுத்த கட்டுரையில்
உண்டியல் பணத்தை நிதியாக கொடுத்த சிறுமிக்கு லேப்டாப் கொடுத்த முதல்வர்!