1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Updated : வியாழன், 13 மே 2021 (09:20 IST)

நெல்லையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 13 பேர் ஒரே நேரத்தில் மரணம்!

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகளால் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நிலையில் நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் தட்டுப்பாடு எழுந்துள்ளது. 
 
அந்தவகையில் நெல்லையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 13 பேர் ஒரே நேரத்தில் மரணித்துள்ள சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
மேலும், கடந்த 3 நாட்களாக தினசரி மரணம் அதிகரித்து கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சற்றுமுன் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் தயாரிக்கப்பட்ட ஆக்சிஜன் நெல்லை அரசு மருத்துவமனைக்கு வந்தடைந்தது.