1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Drones not allowed in chennai high court places

சென்னை உயர்நீதிமன்றத்தின் மீது ட்ரோன்கள் பறக்க தடை: அதிரடி அறிவிப்பு..!

சென்னை
சென்னை உயர்நீதிமன்றத்தின் மீது ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு அதிரடியாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. 
 
சென்னை உயர்நீதிமன்றம் செயல்படும் பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டதோடு சென்னை உயர்நீதிமன்றம், உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆகிய பகுதிகளில் ட்ரோன்கள் பறக்க தடை செய்யப்பட்ட பகுதி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
திரைப்படங்கள் பொது நிகழ்ச்சிக்காக உயர் நீதிமன்றத்தை ட்ரோன் கேமராமூலம் படம் எடுத்ததாக புகார் அளிக்கப்பட்டது. படம் எடுத்தவர்கள் காவல்துறை விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு விடுவிக்கப்பட்ட நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
யுஜிசி நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீட்டிப்பு; என்டிஏ அறிவிப்பு