தொடர்புடைய செய்திகள்
- சுட்டெரிக்கும் வெயிலுக்கு குளு குளு மழை: இன்னும் 48 மணி நேரத்தில்...
- குப்பை கொட்டக்கூட லாயக்கில்லாதவர்கள் என்பதை மாற்றுங்கள் – அரசுக்கு ஸ்டாலின் அறிக்கை!
- பொதுத் தேர்வுக்கு பள்ளிகள் தயார்: பள்ளிக் கல்வித்துறை!!
- வீட்டுக்கு சென்ற கொரோனா நோயாளி மூன்று நாட்களில் உயிரிழப்பு! – சென்னையில் அதிர்ச்சி!
- 1,000-த்தை தொட்ட பேட்டைகள்: மோசமாக மாறும் சென்னை!!
சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு கோவிட் 19 பாதிப்பு ஏற்படாதா?
கொரோனா வைரஸ் பரவலுக்கு ஈடாக அதுகுறித்த போலிச் செய்திகளும் அதிவேகமாக பரவி வருகின்றன.
கொரோனா வைரஸ் பரவத் தொடங்கி ஐந்து மாதங்கள் நிறைவடைய உள்ள நிலையிலும், அது ஏற்படுத்தி வரும் அச்சுறுத்தல் சிறிதும் குறைந்தபாடில்லை.
இந்தியாவின் இரண்டு முக்கிய மருத்துவ அமைப்புகள் மற்றும் அந்த நாட்டின் மூத்த மருத்துவர் ஒருவர் ஆகியோர் வாட்சாப்பில் பரவி வரும் ஒரு குறிப்பிட்ட போலிச் செய்திக்கு எதிராக குரல் கொடுத்துள்ளனர்.
வைரலாக பரவி வரும் அந்த குறுஞ்செய்தியில், கொரோனா வைரஸ் தொடர்பான மற்ற வாட்சாப் பகிர்வுகளை போன்றே, நோய்த்தொற்று பாதிப்பில் இருந்து உங்களை தற்காத்து கொள்வது எப்படி, தனிப்பட்ட சுகாதாரத்தை பேணுவது எப்படி உள்ளிட்ட விடயங்கள் விளக்கப்பட்டுள்ளன.
மேற்குறிப்பிட்டுள்ள வழிமுறைகள் பலவும் ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையில் இருந்தாலும், அதில் சைவ உணவுமுறையை பின்பற்றுதல், பெல்ட், மோதிரங்கள் மற்றும் கைக்கடிகாரங்கள் உள்ளிட்டவற்றை அணிவதை தவிர்த்தல் முதலிய ஆலோசனைகள் கொரோனா வைரஸில் இருந்து தற்காத்து கொள்ள உணவும் என்று கூறப்பட்டுள்ளதற்கு இதுவரை ஆதாரங்கள் எதுவும் இல்லை.
அடுத்த கட்டுரையில்
