1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 26 டிசம்பர் 2018 (21:10 IST)

திமுகவின் ஊராட்சி சபை கூட்டம் நடத்தும் தேதி திடீர் மாற்றம்

மக்களிடம் செல்வோம்- மக்களிடம் சொல்வோம்- மக்களின் மனங்களை வெல்வோம்” என்ற மூன்று முத்தான முழக்கங்களை முன் வைத்து வரும் ஜனவரி  3ஆம் முதல் தேதி ஊராட்சி சபை கூட்டத்தை நடத்த போவதாக சமீபத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் இந்த ஊராட்சி சபை கூட்டம் தேர்தல் பிரச்சாரமாகவும் பயன்படும் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் வரும் ஜனவரி 2ஆம் தேதி முதல் தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்க உள்ளதாக சட்டசபை செயலர் அறிவித்துள்ளதால் திமுக நடத்த திட்டமிட்டிருந்த ஊராட்சி சபை கூட்டம் நடத்தும் தேதி மாற்றப்பட்டுள்ளது

திமுக சார்பில் நடத்தும் ஊராட்சி சபை கூட்டம் சட்டமன்ற கூட்டம் முடிந்தவுடன் ஜனவரி 8ஆம் தேதி முதல் பிப்ரவரி 17ஆம் தேதி வரை வரை நடைபெறும் என திமுக தலைமை அறிவித்துள்ளது.