1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 1 ஏப்ரல் 2022 (11:31 IST)

காவலரை திட்டிய திமுக நிர்வாகி நீக்கம் – திமுக தலைமை அதிரடி!

சென்னையில் காவலரை தகாத வார்த்தையில் திட்டியதாக திமுக பிரமுகர் மீது புகார் எழுந்த நிலையில் அவரை திமுக கட்சி பொறுப்பிலிருந்து நீக்கியுள்ளது.

சென்னை ராயபுரம் கிழக்கு பகுதியில் 51வது வார்டில் காவலர் ஒருவர் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளார். அப்போது அவ்வழியாக வந்த திமுக நிர்வாகி ஜெகதீசன் என்பவரை காவலர் விசாரிக்க போக வாக்குவாதம் எழுந்துள்ளது. இதில் ஜெகதீசன் காவலரை தகாத வார்த்தைகளில் திட்டியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில் ஜெகதீசன் மீது நடவடிக்கை எடுத்துள்ள திமுக பொதுசெயலாளர் துரைமுருகன், அவரை கழக கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்டதற்காக அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி உத்தரவிட்டுள்ளார்.