1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. DMK contains case against L Murugan

மீண்டும் முரசொலி நில பிரச்சினையை கிளப்பிய எல்.முருகன்! – வழக்கு தொடர்ந்த திமுக!

Tamilnadu
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் முரசொலி நில விவகாரம் குறித்து மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியதாக எல்.முருகன் மீது திமுக வழக்கு தொடர்ந்துள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிரமாக பிரச்சார வேலைகளில் இறங்கியுள்ளன. இந்நிலையில் பாஜக கூட்டம் ஒன்றில் பேசிய பாஜக தமிழக தலைவர் எல்.முருகன் திமுகவின் முரசொலி நிலம் குறித்து பேசியது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

முரசொலி நில விவகாரத்தில் முன்னதாக மூலப்பத்திரத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த நிலையிலும், தொடர்ந்து பாஜக தலைவர் எல்.முருகன் உள்நோக்கத்துடன் முரசொலி நில விவகாரம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருவதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளார்.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை! – முக்கிய முடிவு வெளியாக வாய்ப்பு!