தொடர்புடைய செய்திகள்
- ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரிய மனு: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!
- ஈரோடு கிழக்குத் தொகுதி: தபால் வாக்குப்பதிவு இன்று முதல் தொடக்கம்..!
- முக்கிய கட்சியின் வேட்பாளர் திடீர் மரணம்.. பிப்ரவரி 27ஆம் தேதி தேர்தல் ஒத்திவைப்பு..!
- மாணவர்களை மீட்க உக்ரைன் போரை நிறுத்திய பிரதமர் மோடி? – ஜே.பி.நட்டா பேச்சு!
- ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு தடை கோரி மனு: சென்னை ஐகோர்ட்டில் தாக்கல்..!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை ரத்து செய்யுங்கள்: தேமுதிக மனு..!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை ரத்து செய்யுங்கள் என தேமுதிக தலைமை தேர்தல் அதிகாரியிடம் மனு கொடுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வரும் 27ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் இந்த தேர்தலுக்கான பிரச்சாரம் தற்போது உச்சகட்டத்தில் உள்ளது.
இந்த நிலையில் ஈரோடு கிழக்கு பகுதியில் பரிசு பொருட்கள் வழங்குவதாக புகார் எழுந்துள்ளது. அதுமட்டுமின்றி ஈரோடு கிழக்கு தொகுதியில் பணப்பட்டுவடா நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இது குறித்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா சார்பில் தேமுதிகவின் பிரமுகர்கள் தேர்தல் அதிகாரியிடம் மனு கொடுத்துள்ளனர். ஈரோடு கிழக்கு தொகுதியில் பணப்பட்டுவலா நடைபெறுவதாகவும் பரிசு பொருள்களை வழங்கப்படுவதாகவும் எனவே இந்த தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Edited by Siva
