1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 11 ஜூலை 2022 (17:08 IST)

தேவை முடிந்ததும் ஓபிஎஸ்ஸை கழட்டி விட்டுள்ளார் எடப்பாடி: திவாகரன்

Divakaran
தேவை முடிந்ததும் ஓ பன்னீர்செல்வம் அவர்களை எடப்பாடி பழனிசாமி கழட்டி விட்டு விட்டார் என திவாகரன் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
அதிமுகவின் இருந்த ஓ பன்னீர்செல்வம் அவர்களை தேர்தல் நேரத்தில் பயன்படுத்திக் கொண்டு தேவை முடிந்ததும் அவரை கழட்டி விட்டு விட்டதாக திவாகரன் கூறியுள்ளார். 
 
எடப்பாடி பழனிச்சாமி பணத்தை வைத்து இந்த பதவியை பெற்று உள்ளார் என்றும் இது அதிக நாளைக்கு நீடிக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார் .
 
இந்த நிலையில் தான் ஆரம்பித்து நடத்தி வந்த கட்சியை சசிகலாவின் கட்சியோடு திவாகரன் இணைத்து விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.