தொடர்புடைய செய்திகள்
- எஸ்கேப் ஆகுறதே வேலையா போச்சு... ஆணையத்துக்கு டிமிக்கி கொடுத்த ஓபிஎஸ்
- வாக்கு எந்திரம் வேண்டாம்.. வாக்குச் சீட்டுதான் வேண்டும் – எதிர்க்கட்சிகள் கோரிக்கை
- முக்கியக் கட்சிகள் அழைத்தன… ஆனால் இன்னும் முடிவு செய்யவில்லை – தேர்தல் குறித்து கமல்
- தேனி தொகுதியில் களம் இறங்க தயாராகும் ஓபிஎஸ் மகன்?
- தி.மு.க., அதிமுக இரண்டுமே வேண்டாம் – பாமக எடுத்த புது முடிவு ?
ஓபிஎஸ் மகன் போட்டியிட்டால்? தினகரன் எச்சரிக்கை
வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட நேற்று முதல் விருப்பமனுக்களை அதிமுகவினர் பெற்று செல்லும் நிலையில் துணை முதல்வர் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்தும் விருப்பமனுவை பெற்றுள்ளார். எனவே அவர் தேனி தொகுதியில் போட்டியிட சீட் கேட்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் ஓபிஎஸ் மகன் போட்டியிடுவது குறித்து கருத்து தெரிவித்த அமமுக துணை பொதுச்செயலாளர் தினகரன், ஒரு குடும்பத்தின் கையில் இருந்த அதிமுகவை மீட்க பாடுபட்டேன் என்று கூறும் ஓபிஎஸ், தனது மகனையே போட்டியிட வைப்பதை மக்கள் பார்த்து கொண்டுதான் இருக்கின்றார்கள் என்றும், தேனி தொகுதியில் ஓபிஎஸ் மகன் போட்டியிட்டால் அந்த பகுதி மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள் என்று தினகரன் கூறினார்.
மேலும் முன்னாள் அமைச்சர் கேபி பழனிச்சாமி தன்னை விமர்சனம் செய்ய தகுதி இல்லாதவர் என்றும், தன்னுடைய பூனைப்படையை எடுபிடியாக இருந்தாவர் என்றும் தினகரன் கூறினார்
