தொடர்புடைய செய்திகள்
- எம்ஜிஆர் ஜெயலலிதாவிற்கு இருவருக்குமே மக்கள்தான் வாரிசு: முதல்வர் பழனிச்சாமி
- ’’சொத்துக் குவிப்பு வழக்கு ‘...’சுதாகரனை விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவு
- ஆ ராசா மீது வழக்குப் பதிவு – அதிமுக வழக்கறிஞர் புகாரை ஏற்ற போலீஸார்!
- பெசன்ட்நகர் மயானத்தில் சித்ரா உடல் தகனம்: சின்னத்திரை கலைஞர்கள் கண்ணீர் அஞ்சலி
- ஸ்டாலின் மீது தொடரப்பட்ட வழக்கில் நான்கு ரத்து – நீதிமன்றம் தீர்ப்பு!
என்னது ‘ண்ணா நூறாண்டு நூலகமா’? தமிழக அரசை விமர்சிக்கும் திமுகவினர்!
சென்னையில் அமைந்துள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தை அதிமுக அரசு சரியாக கவனிப்பதில்லை என திமுகவினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
2006-2011 கலைஞர் ஆட்சியில் கட்டப்பட்ட கட்டிடம் கோட்டூர்புரத்தில் அமைந்துள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம். இதை அடுத்து ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா அந்த கட்டிடத்தில் இருந்து நூலகத்தை மாற்றப்போவதாக அறிவித்ததை அடுத்து போராட்டங்கள் எழுந்து வாசகர்கள் நூலகத்தைக் காபாற்றினர். ஆனாலும் அந்த நூலகத்தை அதிமுக அரசு சரியாக பராமரிப்பதில்லை என சொல்லப்படுகிறது.
மேலும் 10 ஆண்டுகளாக பெரிதாக எந்த புத்தகங்களும் வாங்கவில்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்நிலையில் இப்போது நூலகத்தின் முகப்பில் உள்ள பெயர் பலகையில் அண்ணாவில் அ என்ற எழுத்து விழுந்துள்ளது. அதைக் கூட மாற்றாமல் இருப்பதாக அதிமுக அரசு மீது திமுகவினர் குற்றம் சாட்டியுள்ளனர். அது சம்மந்தமான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அடுத்த கட்டுரையில்
