1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 10 மே 2021 (14:03 IST)

சென்னையில் இருந்து பெட்டி படுக்கையை கட்டிய 2 லட்சம் பேர் !

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து சென்னையில் இருந்து 2,05,875 பேர் வெளியூர்களுக்குச் சென்றுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. 

 
இன்று அதிகாலை 4 மணி முதல் மே 24 ஆம் தேதி காலை 4 மணி வரை இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே. இதனையடுத்து சென்னையில் உள்ள பொதுமக்கள் தங்களது சொந்த ஊர் செல்லும் வகையில் சிறப்பு பேருந்துகள் கடந்த இரண்டு நாட்களாக விடப்பட்டன. 
 
இந்த பேருந்துகள் மூலம் 8 மற்றும் 9 ஆம் தேதிகளில் சென்னையில் இருந்து 2,05,875 பேர் வெளியூர்களுக்குச் சென்றுள்ளனர். அதிகப்படியாக தென்மாவட்டங்கள் மற்றும் மதுரை மண்டலத்திற்கும், வடமாவட்டங்களுக்கும் அதிக அளவில் பயணிகள் சென்றதாக தமிழக போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.