1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 10 மே 2021 (09:30 IST)

காவல் வலையத்தில் சென்னை சிட்டி!!

இரண்டு வார பொது முடக்கத்தை கருத்தில் கொண்டு சென்னையில் 35 மேம்பாலங்கள் மூடப்பட்டுள்ளது. 

 
இன்று அதிகாலை 4 மணி முதல் மே 24 ஆம் தேதி காலை 4 மணி வரை இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே. இதனால் சென்னையில் சுமார் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 
 
இரண்டு வாரங்களுக்கு பொது முடக்கத்தை கருத்தில் கொண்டு சென்னையில் 35 மேம்பாலங்கள் மூடப்பட்டுள்ளது. 200 இடங்களில் சட்டம் ,ஒழுங்கு காவல் துறையினர் சார்பிலும் 118 இடங்களில் போக்குவரத்து காவல்துறையினர் சார்பிலும் வாகன தணிக்கை சோதனை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.