1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Curfew extension with relaxations

தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு

புதுச்சேரி யூனியன்
புதுச்சேரி யூனியனில் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.  

கடந்த ஆண்டு சீனாவில் இருந்து  உலக நாடுகளுக்குப்பரவிய கொரொனாவால் பல கோடிப்பேர் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், இந்தியாவில் நாள்தோறும் கொரொனா இரண்டாம் அலைப்பரவல் அதிகரித்து வருகிறது.  விரைவில் கொரொனா மூன்றாம் அலை பரவ வாய்ப்புள்ளது என அரசால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையே  3 ஆம் அலை தீவிரமடையும் என்று ஐஐடி கான்பூர் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், புதுசேரி யூனியன் பிரதேசத்தில்  தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை செப்டம்பர் 15 ஆம் தேதி வரை நீட்டித்து புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும் புதுச்சேரியில் இரவு 10;30 மணிக்கு மேல் அதிகாலை  5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது
About Writer
sinoj
அடுத்த கட்டுரையில்
பிசாசு-2 பட புதிய அப்டேட்...ரசிகர்கள் மகிழ்ச்சி