1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Cuddalore manjakuppam post office shut downed today

தபால் காரருக்குக் கொரோனா…. கடலூரில் தபால் நிலையம் மூடல்!

கடலூர்
கடலூர் மஞ்சக்குப்பத்தில் செயல்புரிந்து வரும் தபால் நிலையம் இன்று ஒரு நாள் மூடப்பட்டுள்ளது.

கடலூர் மஞ்சக்குப்பத்தில் தலைமை தபால் நிலையம் இயங்கி வருகிறது. இதில் வேலை செய்த தபால் காரர் ஒருவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்த நிலையில் அவருக்கு கொரோனா சோதனை மேற்கொண்டதில் பாஸிட்டிவ் என முடிவு வந்துள்ளது. இதையடுத்து அந்த தபால் நிலையம் இன்று ஒருநாள் மூடப்பட்டது. மூடப்பட்டதை அடுத்து அலுவலகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் நடந்துள்ளன.