1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 18 ஜனவரி 2024 (11:26 IST)

சனாதனம் குறித்த சர்ச்சை பேச்சு: அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சிறப்பு நீதிமன்றம் சம்மன்

சனாதனம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் உதயநிதி ஸ்டாலின் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பேசிய நிலையில் பீகார் சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பி உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  

னாதனத்தை கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா மாதிரி எதிர்க்கக் கூடாது என்று, ஒழிக்க வேண்டும் சனாதன எதிர்ப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

இதனை எதிர்த்து அவர் மீது பீகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிப்ரவரி 13ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.  

மேலும் அமைச்சருக்கு பதிலாக அவரது வழக்கறிஞர் நீதிமன்றத்தில் ஆஜராகி பதிலளிக்கலாம் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.  இந்த வழக்கில் உதயநிதி ஸ்டாலின் ஆஜர் ஆவாரா அல்லது அவரது வழக்கறிஞர் ஆஜராவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Edited by Mahendran