1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : புதன், 17 ஜனவரி 2024 (18:00 IST)

களைகட்டிய காணும் பொங்கல்.! பழவேற்காடு கடலில் அலைமோதிய கூட்டம்..!!

lake
காணும் பொங்கலையொட்டி பழவேற்காடு கடலில் லட்சக்கணக்கான மக்கள் குளித்து மகிழ்ச்சி அடைந்தனர். 
 
காணும் பொங்கலையொட்டி தமிழகத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தளங்களிலும் மக்களின் கூட்டம் அலைமோதியது. அதன்படி திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில்  லட்சக்கணக்கான மக்கள் திரண்டனர்.  குடும்பம் குடும்பமாக வருகை தந்த மக்கள், பழவேற்காடு கடலில் குளித்து மகிழ்ச்சி அடைந்தனர். அங்குள்ள கலங்கரை விளக்கம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களை கண்டு ரசித்தனர்.
 
sea
பழவேற்காடு ஏரியில் படகு சவாரிக்கு  தடை விதித்துள்ள நிலையில் ஆபத்தை உணராமல் காவல்துறையின் எச்சரிக்கையை மீறி பொதுமக்கள் பாதுகாப்பற்ற முறையில் படகு சவாரி செய்தனர்.

 
பழவேற்காடு சுற்றுலா தளத்திற்கு பொது மக்களின் வருகை அதிகரித்து வருவதால், தடை செய்யப்பட்டுள்ள படகு சவாரியை மீண்டும் துவங்கிட  வேண்டுமென்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை எடுத்துள்ளனர்