வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 8 ஆகஸ்ட் 2018 (10:47 IST)

கருணாநிதி உடலை மெரினாவில் அடக்கம் செய்ய வேண்டும் : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா சமாதிக்கு அருகில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்து உத்தரவிட்டது.

 
திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை 6.30 மணிக்கு காலமானார். இவரது உடலை மெரினாவில் அண்ணா சமாதிக்கு அருகில் அடக்கம் செய்ய தமிழக முதல்வரிடம் கோரிக்கை விடப்பட்டது. ஆனால் இதற்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. சட்ட சிக்கல்கள் இருப்பதாக கூறி, கிண்டி காமராஜர் நினைவிடத்தில் அவரை உடலை புதைக்க அரசு நிலம் ஒதுக்கியது. 
 
இது தொடர்பாக நேற்று இரவு நீதிமன்றத்தில் திமுக தொடர்ந்த வழக்கு இன்று காலை 8 மணிக்கு மறு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில் பதில்பனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் கருணாநிதியின் உடலை காந்தி மண்டபம் அருகே அடக்கம் செய்ய 2 ஏக்கர் நிலம் ஒதுக்கியது அரசின் கொள்கை முடிவாகும். இது மத்திய அரசின் விதிகளுக்கு உட்பட்டே எடுத்த முடிவாகும். எனவே அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என  தெரிவித்துள்ளது. 
 
அதேசமயம், தலைவர்களின் உடலை மெரினாவில் அடக்கம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட 5 வழக்குகளும் நீதிமன்றத்தில் வாபஸ் பெறப்பட்டது. எனவே, அந்த 5 மனுக்களையும் நீதிபதி தள்ளுபடி செய்தார். 
 
ஆனாலும், பல்வேறு காரணங்களை கூறி மெரினாவில் இடம் அளிக்க முடியாது என அரசு தரப்பு வழக்கறிஞர் வாதாடினார். ஆனால், பலமான காரணங்களை எடுத்துரைத்து திமுக தரப்பு வழக்கறிஞரும் தனது வாதத்தை முன்வைத்தார்.
 
இதையடுத்து, தற்போது தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஹூலுவாடி ரமேஷ் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் ஒதுக்க தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்து உத்தரவிட்டார். இதை அறிந்த திமுக தொண்டர்கள் தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர்.