1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Couples commit suicide one after one in ranipet

கணவன், மனைவி அடுத்தடுத்து தற்கொலை – குழந்தைகளுக்கு நேர்ந்த பரிதாபம்!

ராணிபேட்டை
வெங்கடேசனின் குடும்ப புகைப்படம்

வேலூரை அடுத்த ராணிப்பேட்டையில் மனைவியும் கணவரும் அடுத்தடுத்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.

ராணிப்பேட்டையைச் சேர்ந்த வெங்கடேசன் பெங்களூருவில் இருக்கும் ஒருவருக்கும் தனிப்பட்ட செவிலியராகப் பணியாற்றி வருகிறார். இதனால் அவரது மனைவி நிர்மலாவும் சஞ்சனா ஸ்ரீ மற்றும் ரித்திகா ஸ்ரீ ஆகியோர் ராணிப்பேட்டையிலே வெங்கடேசனின் பெற்றோருடன் வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் மாமனார் மாமியாரோடு அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டிருந்த நிர்மலா சில தினஙகளுக்கு முன்னர் தூக்குபோட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இதையறிந்து ராணிப்பேட்டைக்கு வந்த வெங்கடேசன் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளார். இந்நிலையில் விரக்தியடைந்த அவர் தன் 3 வயது மற்றும் 1 வயது குழந்தைகளோடு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவமானது ராணிப்பேட்டையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த கட்டுரையில்
நேற்று 24 கோடி, இன்று 57 கோடி: உண்மையில் சிக்கிய பணம் எவ்வளவு?