1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: புதன், 2 மார்ச் 2022 (17:46 IST)

கொரொனா கட்டுப்பாடுகள் தளர்வு- முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

தமிழகத்தில் கொரோனா தொற்றுப் பரவல் குறைந்து வரும் நிலையில், கொரொனா கட்டுப்படுகளுக்கு தளர்வுகள் அறிவித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

அதில்,திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த சுப நிகழ்வுகளில் சுமார் 500 ப பேர் கலந்துகொள்ளலாம் எனவும், துக்க நிகழ்வுகளில்  250 பேருக்கு மிகாமல் கலந்துகொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், திருமணம் மற்றும் துக்க நிகழ்வுகளுக்கான  கட்டுப்பாடுகள்  தவிர மற்ற அனைத்துக் கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சமூதாய, கலாச்சார மற்றும் அரசியல் கூட்டங்களுக்கு விதிக்கப்பட்ட  கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளது.

இப்புதிய தடை உத்தரவு வரும் 3 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் எனவும் பொதுமக்கள்  அனைவரும் பொது இடங்களில் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் எனவும்  அறிவித்துள்ளார்.