செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: புதன், 15 செப்டம்பர் 2021 (22:14 IST)

கோவையில் 46 மாணவர்களுக்கு கொரொனா!

கோவையில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் கடந்த 2 நாட்களில் 46 மாணவர்களுக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்களில் கேரள மாநிலத்தில் இருந்து வந்த 4 மாணவர்களில் இருந்துதான் பிற மாணவர்களுக்குக் கொரொனா தொற்றுப் பரவியதாகவும் கூறப்படுகிறாது.

மேலும், கோவை மாவட்டத்தில்  கொரொனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் அங்கு மேலும் 16 நாட்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளதாவது: கோவையில் மேலும் 16 நாட்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. கோவையில் ஞாயிற்றுக் கிழமைகளில் திரையரங்குகள், பூங்காக்கள், மால்கள் இயங்கத் தடை விதிக்கப்படுகிறது.

அதேபோல் பால், காய்கறி, மளிகை கடைகள் தவிர மற்ற கடைகள் அனைத்தும் ஞாயிற்றுக் கிழமை இயங்கத் தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.