தொடர்புடைய செய்திகள்
- மதுரையில் விசிக கொடி.. அனுமதி கொடுத்த வருவாய் ஆய்வாளர் சஸ்பெண்ட்..!
- கெட்டிக்காரன் புளுகு 8 நாள்.. எடப்பாடியார் புளுகு 8 வினாடி கூட இல்ல! - மு.க.ஸ்டாலின் தாக்கு!
- 6 மாசத்துல ஆதவ் மனம் மாறுவாரா? இல்ல திருமா அணி மாறுவாரா? - தமிழிசை சௌந்தர்ராஜன் கேள்வி
- புத்தக வெளியீட்டுக்கு மறுநாள் விஜய்யுடன் ரகசிய சந்திப்பா? ஆதவ் அர்ஜுன் குறித்து பரவும் வதந்தி..!
- திமுகவிடம் இருந்து எந்த அழுத்தமும் இல்லை: முதல்வரை சந்தித்த பின் திருமாவளவன் பேட்டி..!
மதுரை கொடிக்கம்ப விவகாரம்: வி.சி.க. நிர்வாகிகள் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு..!
மதுரையில் கொடிக்கம்ப விவகாரம் கடந்த சில நாட்களாக பரபரப்பு ஏற்படுத்திய நிலையில், வருவாய் துறை அதிகாரிகளை தாக்கியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.
மதுரையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் 45 அடி கொடிமரம் கட்ட வருவாய் துறை அனுமதி வழங்கப்பட்ட நிலையில், டிசம்பர் 7ஆம் தேதி கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.
மதுரையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் 45 அடி கொடிமரம் கட்ட வருவாய் துறை அனுமதி வழங்கப்பட்ட நிலையில், டிசம்பர் 7ஆம் தேதி கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிலையில், வருவாய் துறை அதிகாரிகளை தாக்கியவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், காவல்துறையின் மீதான ஒழுங்கு நடவடிக்கை கைவிட வேண்டும் என்றும் வருவாய் துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த நிலையில், 45 அடி கொடிமரம் நடுவதை தடுக்க தவறிய வருவாய் அலுவலர் அனிதா சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இந்த நிலையில் துணை வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளை தாக்கியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விஏஓ கொடுத்த புகாரின் அடிப்படையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் ஐந்து பேர் உள்பட 21 பேர் மீது 8 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
