தொடர்புடைய செய்திகள்
- அரசு எச்சரிக்கையை மீறி தனியார் பள்ளிகள் விடுமுறை..! – எந்தெந்த மாவட்டங்களில்?
- கனியாமூர் பள்ளி கலவரம்; கலவரக்காரர்கள் 300 பேர் கைது!
- கனியாமூர் பள்ளிக்கு தீ: 1500 மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ், டிசி தீயில் சேதம்!
- தனியார் பள்ளிகள் இன்று இயங்கும்: மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநரகம் அறிவி
- மாணவி மர்ம மரணம்: கனியாமூர் பள்ளி தாளாளர், செயலாளர், முதல்வர் கைது!
பள்ளி உரிமையாளர் அறையில் ஆணுறை?சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ!
கள்ளக்குறிச்சி அருகே உள்ள தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி மர்மமான முறையில் மரணமடைந்த நிலையில் பள்ளி உரிமையாளரின் அறையில் ஆணுறைகள் ஆங்காங்கே சிதறி கிடந்ததாக கூறப்படும் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.
பன்னிரண்டாம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் மரணம் அடைந்ததை அடுத்து அந்த பகுதி மக்கள் பெரும் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் வன்முறையாக மாறியது என்பதும் பள்ளியின் பேருந்துகள் மற்றும் சொத்துக்கள் சூறையாடப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சமூக வலைதளங்களில் பரவும் ஒரு வீடியோவில் இருந்து பள்ளி உரிமையாளரின் அறையில் ஆணுறைகள் ஆங்காங்கே சிதறி கிடப்பதாக கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து விசாரணை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்
