வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: புதன், 9 ஜூன் 2021 (15:38 IST)

முதல்வர் ஸ்டாலினிடம் நேரடியாகப் புகார் !

சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில்  ஸ்டாலின் தலைமையிலான திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் அதிகத் தொகுதிகளில் வெற்றி பெற்றன. திமுக தனிப்பெரும்பானையுடன் ஆட்சி அமைத்துள்ளது. முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்று 30 நாட்கள் நிறைவு பெற்றுள்ளது.

இந்நிலையில் முக.ஸ்டாலின்  மக்கள் நலன் சார்ந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். அதேசயம் பொதுமக்கள் தங்கள் குறைகளை முதல்வர் ஸ்டாலினிடம் தெரிவிக்க cmcell.tn.gov.in என்ற தனிப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. மேலும் இப்புகார்கள் மீது முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுத்துள்ளாரா இல்லையா என்பது குறித்து இந்த இணையதளம் வாயிலாக அறிந்துகொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது.