தொடர்புடைய செய்திகள்
- லதா ரஜினி வழக்கு தள்ளுபடி: சென்னை ஐகோர்ட் அதிரடி
- சென்னை வரும் சன்னிலியோன்; எப்போது எதற்காக தெரியுமா?
- சென்னை அண்ணா சாலையில் மீண்டும் பள்ளம்: போக்குவரத்து மாற்றம்
- சென்னை கடலுக்குள் மூழ்கும் அபாயம்; கடற்கரை வள மையம் எச்சரிக்கை
- வீடியோ எடுத்து மிரட்டி உல்லாசம் அனுபவித்த அறிவழகன் - விசாரணையில் திடுக் தகவல்
கோவை பாஸ்போர்ட் அலுவலகம் மூடப்படுகிறதா? பொதுமக்கள் அதிர்ச்சி
கோவையில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகம் விரைவில் மூடப்பட்டு அது சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்துடன் இணைக்கப்படும் என்றும் இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.
சமீபத்தில் கோவையில் இயங்கிவரும், அச்சகத்தை மூடவுள்ளதாக மத்திய அரசு அறிவித்தது. இந்த அதிர்ச்சி மறைவதற்குள் தற்போது மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தையும் மூடவுள்ளதாக வெளிவந்து கொண்டிருக்கும் செய்தியால் அந்நகர மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கோவை பாஸ்போர்ட் அலுவலக கட்டிடம் ரூ.3 லட்சம் வாடகையில் இயங்குவதாகவும், இங்கு போதுமான அதிகாரிகள் இல்லை என்பதாலும் இந்த அலுவலகம் மூடப்படுவதாக கூறப்படுகிறது. இந்த அலுவலகம் மூடப்பட்டால் கோவை, நீலகிரி, ஈரோடு, நாமக்கல், சேலம், திருப்பூர் ஆகிய ஆறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் சென்னைக்கு சென்றுதான் பாஸ்போர்ட் எடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
