1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 30 டிசம்பர் 2021 (15:51 IST)

நெல் கொள்முதல் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் நெல் கொள்முதல் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு சற்று முன் அறிவித்துள்ளார் 
 
நெல் கொள்முதல் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும் என தொழிற்சங்கங்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த கோரிக்கை தற்போது நிறைவேற்றுவதாக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
இதன்படி நெல் கொள்முதல் நிலையங்களில் பணிபுரியும் பணக்காரர்களுக்கு மாத ஊதியம் 5285  என்றும் உதவியாளர்களுக்கு மாத ஊதியம் 5218  என்றும் உயர்த்தப்படுவதாக அறிவித்துள்ளார் 
மேலும் அகவிலைப்படி தொகை ரூபாய் நானும் 3499 சேர்த்து வழங்கிடவும் முதல்வர் ஒப்புதல் அளித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
நெல்கொள்முதல் ஊழியர்களுக்கு சம்பள உயர்வை முதல்வர் ஸ்டாலின் அறிவித்ததை அடுத்து ஊழியர் சங்கங்கள் தங்களது நன்றியை முதல்வருக்கு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது