தொடர்புடைய செய்திகள்
- வாடகை கேட்ட ஹவுஸ் ஓனர்; குத்திக் கொன்ற அஜித்! – குன்றத்தூரில் பரபரப்பு!
- எந்த நோயும் இல்லாமல் கொரோனாவால் மட்டும் பலியான சென்னை இளம்பெண்: அதிர்ச்சி தகவல்
- பாதிப்பு குறைந்தாலும் பலி எண்ணிக்கை அதிகரிப்பு: இன்றைய தமிழக கொரோனா நிலவரம்
- ஊரடங்கு முடியும் வரை நடமாடும் அங்காடிகள்!!
- ’’மூலிகை மைசூர்ப் பாக்...’’பொய்யான விளம்பரம் செய்த கடைக்கு சீல்!
ஊரடங்கிலும் அடங்காத பைக் ரேஸர்கள்! – சென்னையில் தீவிர பாதுகாப்பு!
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சென்னை முழுவதிலும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையிலும் பல இடங்களில் பைக் ரேஸ் நடைபெறுவதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. சென்னையிலும் கொரோனா தொற்று அதிகரித்து வந்த நிலையில் கடந்த சில வாரங்களாக முழுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் சென்னைவாசிகள் சிலர் நள்ளிரவு நேரங்களில் பைக் ரேஸ் போன்றவற்றில் ஈடுபடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை பெரம்பூர் பகுதியில் முறசொலிமாறன் மேம்பாலத்தில் இளைஞர்கள் பலர் பைக் ரேஸில் ஈடுபடுவதாக தெரிய வந்ததையடுத்து அங்கு முழுவதுமாக தடைகள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு பனீயில் காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கனரக வாகனங்கள் தவிர பிற வாகனங்கள் மேம்பாலத்தில் செல்ல தடை செய்யப்பட்டுள்ளன.
