1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 17 மே 2022 (08:53 IST)

பப்ஜியில் பணத்தை இழந்த விரக்தியில் கல்லூரி மாணவர் தற்கொலை !

pubg
பப்ஜியில் பணத்தை இழந்த விரக்தியில் கல்லூரி மாணவர் தற்கொலை !
பப்ஜியில் பணத்தை இழந்த விரக்தியில் சென்னை கல்லூரி மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
பப்ஜி போன்ற விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்றும் இதனால் பல இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர் 
இந்த நிலையில் சென்னை கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு படிக்கும் அருண்குமார் என்ற மாணவர் பப்ஜியில் பணத்தை இழந்த விரக்தியில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக 
 
படிப்புக்காக பெற்றோர் கொடுத்த பணத்தை இழந்தது மட்டுமல்லாமல் பேப்பர் போட்டதால் கிடைத்த பணத்தையும் இழந்ததால் அவர் விரக்தியில் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது