தொடர்புடைய செய்திகள்
- சென்னை ஐஐடி அறிமுகப்படுத்திய பிஎஸ் எலக்ட்ரானிக்ஸ் சிஸ்டம்ஸ் படிப்பு: முக்கிய அறிவிப்பு..!
- மீண்டும் இறங்கிய தங்கம் விலை.. ஒரே நாளில் ரூ.320 குறைந்ததால் இன்ப அதிர்ச்சி..!
- சென்னை உள்பட 5 மாவட்டங்களில் பகலில் வெயில், மாலையில் மழை: தமிழ்நாடு வெதர்மேன்
- மத்திய கணக்கு தணிக்கைக்குழுவால் மாநில அரசின் உரிமை பறிக்கப்படாது - சென்னை உயர்நீதிமன்றம்
- இன்று முதல் 4 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்
சென்னை ஸ்டான்லி, தருமபுரி மருத்துவ கல்லூரிகள் மீண்டும் செயல்பட அனுமதி!
சென்னை ஸ்டான்லி மருத்துவ கல்லூரி மற்றும் தர்மபுரி மருத்துவக் கல்லூரி மீண்டும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
சென்னை மருத்துவமனை மருத்துவக் கல்லூரி மற்றும் தர்மபுரி மருத்துவக் கல்லூரிகள் இயங்க மத்திய அரசு தடைவிதி தந்த நிலையில் தற்போது அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு செயல்பட தடையில்லா சான்றிதழை மத்திய அரசு வழங்கி உள்ளது.
இரு கல்லூரிகளில் இருந்த குறைகளை சரி செய்து விட்டதாகவும் மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வை மாநில அரசை நடத்த அனுமதி அளித்துள்ளதாகவும் அமைச்சர் சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்
தேசிய மருத்துவ ஆணைய குழுவினர் நேற்று கல்லூரிகளுக்கு நேரடியாக வந்து ஆய்வு செய்ததாகவும் இந்த ஆய்வுக்கு பின்னர் திருப்தி அடைந்த அவர்கள் அடுத்த 5 ஆண்டுகளுக்கு தடை இல்லா சான்றிதழ் வழங்கி உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
