இன்று முதல் சென்னையில் பொதுப்போக்குவரத்துக்கு ஒரே செயலி: 'Chennai One' பயன்கள் என்னென்ன?
சென்னையில் பொதுப்போக்குவரத்து சேவைகளை ஒருங்கிணைக்கும் வகையில், 'Chennai One' என்ற புதிய செயலி இன்று முதல் பயன்பாட்டுக்கு வருகிறது. இந்த செயலியை தமிழக முதல்வர் தொடங்கி வைத்துள்ளார்.
இந்த செயலி மூலம், மக்கள் அரசுப் பேருந்துகள், மெட்ரோ ரயில், புறநகர் ரயில் மற்றும் ஆட்டோக்களுக்கு ஒரே QR குறியீட்டைப் பயன்படுத்தி பயணிக்க முடியும். இது பயணிகளுக்கு மிகவும் வசதியாக இருக்கும்.
மேலும், இந்த செயலி தமிழ், ஆங்கிலம் உட்பட 4 மொழிகளில் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால், அனைத்து தரப்பு மக்களும் எளிதாக இதை பயன்படுத்தலாம்.
'Chennai One' செயலியின் வருகை, சென்னையின் பொது போக்குவரத்து அமைப்பில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Edited by Siva