1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Chennai Nellai vandhe bharath train from august 6

சென்னை - திருநெல்வேலி வந்தே பாரத் ரயில்: தொடங்கும் தேதி அறிவிப்பு..!

சென்னை
சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு செல்லும் வந்தே பாரத் ரயில் விரைவில் தொடங்கும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது இந்த ரயில் சேவை ஆகஸ்ட் 6ஆம் தேதி முதல் தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
சென்னை -  திருநெல்வேலி வந்தே பாரத் ரயில் சேவையை ஆகஸ்ட் 6ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. 
 
ஏற்கனவே சென்னை - மைசூர்,  சென்னை - கோவை ஆகிய இரண்டு வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில் இயங்கி வரும் நிலையில் தற்போது தமிழகத்தின் மூன்றாவது வந்தே பாரத் ரயிலாக சென்னை நெல்லை இடையே இயங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
 இதனை அடுத்து இனி நெல்லை செல்பவர்கள் இந்த விரைவு ரயில் மூலம் சீக்கிரம் செல்லலாம் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
பாகிஸ்தான் மனித வெடிகுண்டு தாக்குதல் 44 பேர் உயிரிழப்பு