1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Chennai Metro Service Disrupted for 5 Days

சென்னை மெட்ரோ ரயில் சேவையில் திடீர் மாற்றம்.. என்ன காரணம்?

மெட்ரோ
சென்னை மெட்ரோ ரயில் சேவையில் திடீரென சில மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்ட கட்டுமான பணிகள் காரணமாக, பச்சை வழித்தடத்தில் குறிப்பிட்ட நேரத்தில் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
 
சேவை நிறுத்தம் மற்றும் மாற்றங்கள்
 
காலம்: செப்டம்பர் 15 முதல் 19-ம் தேதி வரை (ஐந்து நாட்கள்).
 
நேரம்: காலை 5 மணி முதல் 6 மணி வரை.
 
பாதிப்பு: கோயம்பேடு மற்றும் அசோக் நகர் இடையிலான ரயில் சேவை முழுமையாக நிறுத்தப்படும்.
 
விமான நிலையம் மற்றும் செயின்ட் தாமஸ் மௌண்டிலிருந்து புறப்படும் ரயில்கள் அசோக் நகர் வரை மட்டுமே இயக்கப்படும். சென்ட்ரலிலிருந்து புறப்படும் ரயில்கள் கோயம்பேடு வரை மட்டுமே இயக்கப்படும்.
 
ரயில் சேவை இல்லாத இந்த ஒரு மணி நேரத்தில், பயணிகளின் வசதிக்காக கோயம்பேடு மற்றும் அசோக் நகர் இடையே 10 நிமிட இடைவெளியில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.
 
இந்த ஒரு மணி நேரத்தை தவிர, மற்ற நேரங்களில் வழக்கமான மெட்ரோ ரயில் சேவை தொடரும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
சென்னை தி.நகரில் உள்ள பிரபல ஜவுளிக்கடையில் ஐடி ரெய்டு.. ராணுவம் பாதுகாப்பு..!