வியாழன், 19 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 18 செப்டம்பர் 2024 (07:13 IST)

இன்று காலை 10 மணிக்குள் எந்தெந்த மாவட்டங்களில் மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

Chennai Rain
இன்று காலை 10 மணிக்குள் எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும் என்ற அறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் வெளியிட்டுள்ளது.
 
சென்னை வானிலை ஆய்வு மையம் அவ்வப்போது தமிழகத்தின் மழை குறித்த நிலவரங்களை அறிவித்து வரும் நிலையில், சற்றுமுன் இன்று காலை 10 மணிக்குள் கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அறிவித்துள்ளது. மேற்கண்ட இரண்டு மாவட்டங்களிலும் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யும் என்று அறிவித்துள்ளது. இதனை அடுத்து இந்த இரண்டு மாவட்டங்களில் உள்ள மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
 
கடந்த சில நாட்களாகவே மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் சென்னை உள்பட மாநிலத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். ஆனால் அதே நேரத்தில், கடந்த சில நாட்களாக வெயிலின் கொடுமை அதிகமாக இருப்பதாகவும் மழை அளவு குறைவாக இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது.
 
சென்னை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Siva