தொடர்புடைய செய்திகள்
- 7 மாவட்டங்களில் காத்திருக்கிறது செம மழை! வானிலை ஆய்வு மையம் அப்டேட்!
- 4 நாட்களுக்கு பின் தங்கம் விலையில் ஏற்றம்.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?
- சென்னையில் மீண்டும் ஃபார்முலா 4 கார் பந்தயம்! தேதி அறிவிப்பு..!
- சென்னை அரசுப்பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மீது தாக்குதல்: சட்டக்கல்லூரி மாணவி உள்பட 4 பேர் கைது!
- தோனி விக்கெட்டை எடுக்க கோலி கொடுத்த ஐடியா… யாஷ் தயாள் பகிர்ந்த தகவல்!
மாலை 4 மணிக்குள் 9 மாவட்டங்களில் மழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம்..!
தமிழகத்தில் உள்ள ஒன்பது மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
காற்றின் வேக மாறுபாடு, வளிமண்டல சுழற்சி உள்பட பல்வேறு காரணங்களால் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில் மாலை 4 மணி வரை மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் உள்ள ஒன்பது மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்யும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் கோவை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை மற்றும் இரவு வேளையில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
