தொடர்புடைய செய்திகள்
- முடிந்தது கோடை.. கோவையில் கொட்டியது கனமழை..!
- அகமதாபாத்தில் இன்றும் மழை பெய்யும்… சொல்கிறார் தமிழ்நாடு வெதர்மென்!
- மக்கள் தொகை அடிப்படையில் எம்பிக்கள் எண்ணிக்கை.. திமுக, அதிமுக எதிர்ப்பு..!
- இன்றும் குஜராத்தில் மழை பெய்யுமா? – வானிலை ஆய்வு மையம் தகவல்!
- இன்றுடன் நிறைவு பெறுகிறது அக்னி நட்சத்திரம்.. இன்னும் 3 மணி நேரத்தில் தமிழகத்தில் மழை..!
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்!
தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை வரையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அக்னி நட்சத்திர வெயில் முடிவடைந்து தற்போது குளிர்ச்சியான சூழ்நிலை மாறி வருவதாக கூறப்படும் நிலையில் இன்று 10 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, திருப்பத்துார், தர்மபுரி, சேலம் மற்றும் ஈரோடு ஆகிய 10 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும் என்று கத்தரி வயலின் தாக்கம் முடிவடைந்தது அடுத்து தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களில் கோடை மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் மன்னார் வளைகுடா, தெற்கு கடலோர பகுதிகள், இலங்கை கடலோர பகுதிகள், தென்மேற்கு மற்றும் தென் கிழக்கு வங்ககடலில் மணிக்கு 55 கிமீ வேகத்தில் காற்று வீசும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Edited by Siva
