1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 24 மார்ச் 2022 (19:19 IST)

சென்னை-கன்னியாகுமரி 4 வழிச்சாலைக்கு மறு டெண்டர்: அமைச்சர் தகவல்

சென்னை - கன்னியாகுமரி 4 வழிச்சாலைக்கு மறு டெண்டர் விட மத்திய அரசிடம் வலியுறுத்தி உள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்
 
சென்னை - கன்னியாகுமரி நான்கு வழிச்சாலை பணி 70 சதவீதம் முடிவடைந்து விட்டதாகவும் மண் எடுப்பதில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மறு டெண்டர் கோரி மத்திய அமைச்சர் நிதின் கட்காரியிடம் வலியுறுத்தி உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார் 
 
நெல்லை மாவட்டத்தில் இருந்து மண் எடுத்து சாலை அமைப்பதால் இழப்பு ஏற்படும் எனக் கூறி மறு டெண்டர் விடுமாறு தேசிய நெடுஞ்சாலைத்துறையிடம் எல்என்டி நிறுவனம் கேட்டுக் கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்