சனி, 28 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 28 ஏப்ரல் 2022 (19:14 IST)

பட்டியலினத்தவர் என போலி சான்றிதழ்: அணு ஆராய்ச்சி நிலைய ஊழியருக்கு கட்டாய ஓய்வு

court
பட்டியல் இனத்தவர் என போலி சான்றிதழ் கொடுத்து கல்பாக்கம் அணு ஆராய்ச்சி நிலையத்தில் பணிபுரிந்த ஊழியருக்கு கட்டாய ஓய்வு அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது
 
பட்டியல் இனத்தவர் என போலியான சான்றிதழ் கொடுத்து கடந்த பல ஆண்டுகளாக கல்பாக்கம் அணு ஆராய்ச்சி நிலையத்தில் ஒருவர் பணிபுரிந்துள்ளார்.
 
இதுகுறித்து தகவல் அறிந்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலைஇயில் இந்த வழக்கை விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றம் சம்பந்தப்பட்ட அந்த ஊழியருக்கு கட்டாய ஓய்வு வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளது 
அதுமட்டுமின்றி அந்த ஊழியருக்கு 40% மட்டுமே ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது