தொடர்புடைய செய்திகள்
- மே 14 வரை கோடை மழை: கொண்டாடுங்க மக்கா!!
- பதவியேற்பவர்களுக்கு வாழ்த்துக்கள்; கொரோனாவை கவனியுங்கள்! – கமல்ஹாசன் ட்வீட்!
- கொரோனா குறித்த மு.க.ஸ்டாலின் நடவடிக்கை! – அமெரிக்காவிலிருந்து செலின் கவுண்டர் பாராட்டு!
- பாஜக மாவட்ட தலைவர்களுக்கு இன்னோவா கார் பரிசு! – எல்.முருகன் அறிவிப்பு!
- மின்சார கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்! – சீமான் கோரிக்கை!
ஊரடங்கால் குறைந்த பயணிகள் – சென்னையில் 126 விமானங்கள் ரத்து!
தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் உள்நாட்டு விமான சேவை அனுமதிக்கப்பட்டுள்ள போதிலும் சென்னையில் விமானங்கள் ரத்தாகியுள்ளன.
தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை காரணமாக 2 வாரங்களுக்கு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் இருந்து சர்வதேச விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் உள்நாட்டு விமான சேவைகள் மட்டும் அவசர தேவை கருதி அனுமதிக்கப்பட்டுள்ளது.
எனினும் பல மாநிலங்களிலும் ஊரடங்கு இருப்பதால் பலர் பயணங்களை தவிர்த்து வருவதாக கூறப்படுகிறது. இன்று சென்னைக்கு சில விமான சேவைகள் நடந்தாலும், மிகவும் குறைவான பயணிகள் கொண்ட விமான பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதன்படி இன்று மட்டும் சென்னையிலிருந்து புறப்பட இருந்த மற்றும் சென்னைக்கு வரவிருந்த 126 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
