1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Chennai corporation helpline numbers

மாண்டஸ் புயல்: அவசர உதவி எண்களை அறிவித்த சென்னை மாநகராட்சி

Chennai Corporation
வங்ககடலில் தோன்றியுள்ள மாண்டஸ் புயல் புதுவை மற்றும் ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்கும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது மகாபலிபுரம் அருகே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்த நிலையில் புயல் காரணமாக பெரும் சேதம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சென்னை மாநகராட்சி மாண்டஸ் புயல் காரணமாக அவசர உதவி எண்களை அறிவித்துள்ளது. இந்த உதவி எண்கள் பின்வருமாறு; 9445477205 மற்றும் 1913, 044-25619206/07/08
 
புயல் காரணமாக மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்தால் உடனடியாக மேற்கண்ட எண்களுக்கு தகவல் அளிக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
மாண்டஸ்’ புயல் எதிரொலி : மெரினா கடற்கரையில் இருந்து பொதுமக்கள் வெளியேற்றம்