1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 12 டிசம்பர் 2022 (12:59 IST)

இன்று மதியம் முதல் பள்ளிகள் விடுமுறை: அதிரடி அறிவிப்பு வெளியிட்ட கலெக்டர்

holiday
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக கடந்த வாரம் கிட்டத்தட்ட முழுவதுமே விடுமுறை அளிக்கப்பட்டது என்பது தெரிந்ததே. 
 
இந்த நிலையில் இன்று ஏற்கனவே விழுப்புரம், காஞ்சிபுரம் உள்ளிட்ட ஒருசில மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று மழை காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டு உள்ள நிலையில் இன்று மதியம் முதல் பள்ளிகளுக்கு விடுமுறை என செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளதை அடுத்து மாணவர்கள் தற்போது வீடுகளுக்கு சென்று கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து மெட்ரிக், சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு இன்று மதியத்திற்கு மேல் விடுமுறை என எனவும் மாணவர்கள் பாதுகாப்பாக வீட்டிற்கு செல்வதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் பள்ளி முதல்வருக்கு மாவட்ட கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்
 
Edited by Siva