1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. central govt give petrol only Rs.52?

மத்திய அரசின் பெட்ரோல் விலை ரூ.52.75 மட்டும்தானா? நிதியமைச்சர் பிடிஆர் விளக்கம்

பெட்ரோல் விலை
மத்திய அரசு மாநிலங்களுக்கு ரூ.52.50 விலையில் தான் பெட்ரோல் தருகிறது என்றும் மீதம் எல்லாம் தமிழக அரசின் வரி என்ற ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்து நிதி அமைச்சர் தியாகராஜன் பழனிவேல் கூறியதாவது:
 
தொலைக்காட்சியின் காணொளியில் உள்ள பொய்யினை சுட்டிக்காட்ட கடமைப்பட்டுள்ளேன்.
 
1. ஒன்றிய அரசு கொண்டு வந்த விதி தளர்வுக்கு பின் பெட்ரோல் விலையினை நிர்ணயிப்பது அரசுகள் அல்ல. எண்ணெய் நிறுவனங்கள்.
 
2. ஒன்றிய அரசின் விலை 52.75 என்பது முற்றிலும் பொய்.
 
ஒன்றிய அரசு வரி மட்டுமே விதிக்க முடியும். செஸ் 31.50+எக்ஸைஸ் 1.40 = 32.90 ஒன்றிய அரசு வரி விதிக்கிறது. இதில் எக்ஸைஸ் வரியில் 42%(58பைசா) மட்டுமே மாநிலங்களுக்கானது.
 
வெளிப்படையாக தெரிந்த உண்மையை மாற்றி மக்களை ஏமாற்றும் @polimernews -ன் பொய்முகம் அப்பட்டமாக வெளிப்பட்டுள்ளது
 
இவ்வாறு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
 
 
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
பிரபல நடிகையின் மகள் திருமணம்..முதல்வர் ஸ்டாலின் நேரில் வாழ்த்து