1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Updated : வெள்ளி, 20 டிசம்பர் 2019 (13:53 IST)

நடிகர் சித்தார்த் உள்ளிட்ட 600 பேர் மீது வழக்கு பதிவு

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் செய்த நடிகர் சித்தார்த், திருமாவளவன் உட்பட 600 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நேற்று வள்ளுவர் கோட்டத்தில் பெருந்திரளாக போராட்டம் நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் திருமாவளவன், நடிகர் சித்தார்த், கர்நாடக பாடகர் டி.எம்.கிருஷ்ணா ஆகியோரும் கலந்துகொண்டனர்.

மேலும் இந்த போராட்டத்தில் பல சமூக செயற்பாட்டாளர்களும் கலந்துகொண்டனர். இந்நிலையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக அனுமதியின்றி போரட்டம் நடத்தியதாக திருமாவளவன், நடிகர் சித்தார்த், டி.எம்.கிருஷ்ணா உட்பட 600 க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.