செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 25 டிசம்பர் 2019 (14:33 IST)

தம்பி இறந்த சோகத்தில் அண்ணன் எடுத்த விபரீத முடிவு – சென்னை காசிமேட்டில் கொடூரம் !

சென்னை காசிமேட்டில் அண்ணன் தம்பி இருவரும் ஒரே நாளில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை காசிமேட்டை சேர்ந்தவர் ஆரோக்கிய ஆகாஷ் என்ற இளைஞர். இவரும், அவரது அண்ணனிடம் மிகவும் பிரியமாக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் ஆகாஷ் மர்மமான முறையில் இன்று தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

இதையறிந்த ஆகாஷின் அண்ணனும் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதையறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து அண்ணன் தம்பி இருவரின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.