தொடர்புடைய செய்திகள்
- பிறப்பு சான்றிதழை அடையாளமாகப் பயன்படுத்தலாம் - மத்திய அரசு
- ஆவணம் இல்லாமல் ரூ.2000 நோட்டுகளை மாற்ற அனுமதிக்கக் கூடாது: டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு
- 2 ஆயிரம் ரூபாய் நோட்டை ஆவணம் இல்லாம மாத்தலாம்?! – எஸ்பிஐ வங்கி அறிவிப்பு!
- தமிழகம் முழுவதும் இன்று இறுதி வாக்காளா் பட்டியல் வெளியீடு
- 18 வயதானால் தானாகவே வாக்காளர் பட்டியலில் பெயர் சேரும்.. மத்திய அரசு
இன்று முதல் புதிய விதி அமல்: முதன்மை ஆவணமாகிறது பிறப்புச் சான்றிதழ்கள்..!
இன்று முதல் பல்வேறு சேவைகளுக்கு பிறப்புச் சான்றிதழ்கள் முதன்மை ஆவணமாகச் செயல்படும் என்ற புதிய விதி இன்று முதல் அமலுக்கு வருகிறது. மேலும் பிறப்பு சான்றிதழ் அனைத்திற்கும் ஒரே ஆவணமாகிறது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது ஆதார் அட்டை, கல்வி நிறுவனங்களில் சேர்க்கை, வாக்காளர் பட்டியல் தயாரித்தல், ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் வழங்குதல் , அரசுப் பணிகளுக்கான நியமனம் வழங்குதல், திருமணப் பதிவு உள்ளிட்ட பல சேவைகளுக்கு பிறப்புச் சான்றிதழ்கள் ஆவணமாகச் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பிறப்புச் சான்றிதழ்கள் இனி முக்கிய ஆவணமாகச் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பிறப்பு சான்றிதழை வைத்து கொள்ள வேண்டியது கட்டாயமாகிறது.
Edited by Siva
