தொடர்புடைய செய்திகள்
- கட்டிடம் இடிந்து விழுந்து இளம்பெண் பலி! – ஒப்பந்தக்காரர் உட்பட 3 பேர் கைது!
- அமைச்சரை சரமாரியாக சுட்டுக் கொன்ற காவலர்! – ஒடிசாவில் அதிர்ச்சி!
- நள்ளிரவில் தாடி பாலாஜி மனைவி நித்யா செய்த காரியம்.. கைது செய்த போலீசார்!
- இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய மாணவிக்கு பாலியல் தொல்லை... இளைஞர் கைது!
- தப்பிய சாராயக் கும்பல்; பச்சைக்கிளியிடம் விசாரணை! – பீகாரில் பரபரப்பு!
திருப்பூரில் தமிழர்களை தாக்கிய சம்பவம்: பீகாரைச் சேர்ந்த 2 பேர் கைது..!
திருப்பூரில் தமிழர்களை தாக்கிய சம்பவம்: பீகாரைச் சேர்ந்த 2 பேர் கைது..!
திருப்பூரில் தமிழக இளைஞர்களை வட இந்திய இளைஞர்கள் தாக்கியதாக ஒரு வீடியோ இணையதளங்களில் வைரல் ஆன நிலையில் இந்த சம்பவத்தில் பீகாரைச் சேர்ந்த இரண்டு பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
திருப்புர் அனுப்ப பாளையம் என்ற பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்த தமிழக இளைஞர்களை பீகாரரை சேர்ந்த சில இளைஞர்கள் தாக்கியதாக தகவல் வெளியானது.
இது குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலான நிலையில் தற்போது பீகாரை சேர்ந்த ராஜத்குமார், பரேஷ்ராம் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர்கள் மீது மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன
சட்டவிரோதமாக கூடுதல், ஆயுதங்களுடன் ஒன்று கூடுதல், பொது இடத்தில் அவதூறாக பேசி பிரச்சினை ஏற்படுத்துதல் ஆகிய பிரிவுகளில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தமிழக இளைஞர்கள் சிலரையும் போலீசார் தேடி வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.
Edited by Mahendran
