1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 23 மே 2023 (15:17 IST)

பள்ளி ஆசிரியருடன் ஓட்டம் பிடித்த மாணவி

love affair
கன்னியாகுமரியில் பள்ளி மாணவி ஒருவர் ஆசிரியருடன் ஓட்டம் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கிள்ளியூர் பகுதியில் ஒரு தனியார் பள்ளி இயங்கி வருகிறது. அந்தப் பள்ளியில் கிள்ளியூர் பகுதியைச் சேர்ந்த  ஆங்கில ஆசிரியர் (32) பணியாற்றி வருகிறார்.

இன்னும் ஆங்கில ஆசிரியர் திருமணம் செய்துகொள்ளவில்லை. இந்த நிலையில், அப்பள்ளியில், ஒருமாணவி பிளஸ் 2 படித்து வந்துள்ளளர்.

சமீபத்தில் அவர் பொதுத்தேர்வு எழுதிய நிலையில், தேர்வு முடிகள் வெளியானதை அடுத்து, கல்லூரிக்குச் சென்று படிக்கவிருந்தார்.

இந்த நிலையில், கடந்த வாரம் அந்த மாணவிக்கு 18 வயது  நிறைவடைந்து 19 வயது தொடங்கியது. தன் பிறந்த நாளை பள்ளிக்கூட தோழிகளுடன் இணைந்து கொண்டாடினார்.

இதையடுத்து தன் தோழியைச் சந்திக்கச் செல்வதாகப் பெற்றோரிடம் கூறிவிட்டுச் சென்றவர் வீடு திரும்பவில்லை. பெற்றோர் மாணவியைப் பல இடங்களில் தேடினர்.

அப்போது, மாணவிக்கும், பள்ளியில் ஆங்கில ஆசிரியருக்கும் இடையே காதல் இருந்தது தெரியவந்தது. உடனே பெற்றோர் போலீஸில் புகாரளித்தனர். இந்த நிலையில்  நேற்று ஆசிரியருடன் மாணவி நாகர்கோவில் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இருதரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில்,  ஆசிரியரின்  பெற்றோர் கேட்டுக்கொண்டதால், மாணவியை அசிரியருக்கு திருமணம் செய்து வைக்க மாணவியின் பெற்றோர் ஒப்புக் கொண்டு கைப்பட கடிதம் எழுதிக் கொடுத்தனர்.