தொடர்புடைய செய்திகள்
- ”எங்கப்பன் குதுறுக்குள் இல்ல”.. தூசிதட்டும் கொடநாடு கொலை வழக்கு! – அமளி செய்து வெளியேறிய அதிமுக!
- 3 மாநிலங்களவை உறுப்பினரகள் பதவிகளையும் கைப்பற்றும் திமுக: எப்படி தெரியுமா?
- என் பிறந்தநாளை யாரும் கொண்டாட வேண்டாம்… சசிகலா வேண்டுகோள்!
- அதிமுக பிரமுகர் வெற்றிவேல் தந்தை வீட்டில் சோதனை
- அதிமுக பிரமுகர் வெற்றிவேல் வீட்டில் ரெய்டு நிறைவு: என்னென்ன சிக்கியது??
சட்டமன்ற வளாகத்தில் இருந்தே அதிமுக வெளியேற சபாநாயகர் உத்தரவு!!
சட்டமன்ற வளாகத்தில் இருந்தே அதிமுக உறுப்பினர்களை வெளியேற சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக ஆண்டு பட்ஜெட் மீதான கூட்டத்தொடர் தமிழக சட்டமன்றத்தில் நடந்து வருகிறது. மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் நடைபெற இருப்பதால் குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே கூட்டத்தொடரை முடித்துக் கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடநாடு கொலை, கொள்ளை விவகாரம் தொடர்பான விவகாரம் மீண்டும் விசாரிக்கப்படும் என தெரிவித்தார். இதை எதிர்த்து அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டதால் பரபரப்பு எழுந்தது.
இந்நிலையில் அதிமுகவுடன் மற்ற எதிர்கட்சிகளான பாமக, பாஜகவும் சட்டப்பேரவையில் வெளியேறியுள்ளனர். பிறகு வளாகத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால் அனுமதியின்றி பேரவையில் அதிமுகவினர் பிரச்சனையை எழுப்பக்கூடாது என்று சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார்.
மேலும், பதாகைகளை கொண்டுவந்து அவையில் அதிமுகவினர் கூச்சல் எழுப்பியது திட்டமிட்ட செயல். இதனால் சட்டமன்ற வளாகத்தில் இருந்தே அதிமுக உறுப்பினர்களை வெளியேற சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.
