1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 2 டிசம்பர் 2021 (20:57 IST)

மீண்டும் புனித ஜார்ஜ் கோட்டையில் சட்டப்பேரவை கூட்டம்?

மீண்டும் புனித ஜார்ஜ் கோட்டையில் சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் என்று செய்திகள் வெளியாகிஉள்ளது
 
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக கலைவாணர் அரங்கில் சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அடுத்த சட்டப்பேரவை கூட்டத்தொடர் மீண்டும் புனித ஜார்ஜ் கோட்டையில் நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது
 
மேலும் சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்ப தொழில்நுட்ப ரீதியாகவும் காகிதமில்லா வகையில் கணினிகள் பொருத்தும் பணியும் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது
 
2022ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் கொரோனா சூழலை பொறுத்து சட்டப்பேரவை கூட்டத்தொடர் புனித ஜார்ஜ் கோட்டையில் நடைபெற்ற அல்லது கலைவாணர் அரங்கில் நடைபெறுமா என்பது குறித்து முடிவு செய்யப்படும் என தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன