1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Anti-corruption officials raid in Karur district.

கரூர் மாவட்டத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திடீர் ரெய்டு.

bribery
கரூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி நடராஜன் தலைமையிலான போலீசார் கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடைபெற்ற சோதனையில் கணக்கில் வராத 15 ஆயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் தரகம்பட்டி துணை சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி தங்கமணி ஆய்வாளர் தலைமையில்  நடைபெற்ற சோதனையில் கணக்கில் வராத 10 ஆயிரம்  ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
 
கரூர் மாவட்டத்தில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் மற்றும் சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத 25 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.
 
கரூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் டிஎஸ்பி நடராஜன் தலைமையில் கரூரில் உள்ள வட்டாரப் போக்குவரத்து  அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தினர் 

அப்பொழுது அங்கிருந்த ஊழியர்களை வெளியே விடாமல் கதவுகளை சாத்திவிட்டு சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கணக்கில் வராத 15,000 ரூபாய் பணம் பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து அங்குள்ள அதிகாரியிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
இதே போல தரங்கம்பட்டியில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்பு காவல் ஆய்வாளர் தங்கமணி தலைமையில் நடைபெற்ற சோதனையில் 10 ஆயிரம் ரூபாய் கணக்கில் வராத பணம்  கண்டறியப்பட்டது இந்த பணத்தையும் பறிவு செய்த போலீசார் தொடர்ந்து அங்கும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
About Writer
Sinoj
அடுத்த கட்டுரையில்
68.19 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!