1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Another student commits suicide in Tamil Nadu

தமிழகத்தில் மேலும் ஒரு மாணவி தற்கொலை

student commits suicide
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த தேத்தாகுடி பகுதியில் செல்போன் விளையாடுவதைக் கண்டித்த்தால் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த தேத்தாகுடி என்ரறா பகுதியைச் சேர்ந்தவர் காளிமுத்து. இவரது மனைவி வாசுகி. இந்த தம்பதியர்க்கு இரண்டு பெண், இரண்டு ஆண் என மொத்தம் 4 குழந்தைகள் உள்ளனர்.

கூலி வேலை செய்து வரும் இந்த தம்பதியின்  17 வயது மகள் அங்குள்ள தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில்,  செல்போனில் அடிக்கடி கேம் விளையாடியதாகத் தெரிகிறது.  இதைத் தாய் கண்டித்த்தால் மனமுடைந்த சிறுமி வீட்டில் விஷம் குடித்திருக்கிறார். அவர் மயங்கியதைப் பார்த்து அதிர்ச்சி அடைன்டஹ் பெற்றோர் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர்.

மாணவியைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
About Writer
Sinoj
அடுத்த கட்டுரையில்
பட்ஜெட் விலையில் மோட்டோ G32 – முழு விவரம் உள்ளே!!